follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP1பிள்ளை பெறுவதற்காக தேவாலய மந்திர நீரை அருந்திய இளம் பெண் மரணம்

பிள்ளை பெறுவதற்காக தேவாலய மந்திர நீரை அருந்திய இளம் பெண் மரணம்

Published on

பிள்ளை பாக்கியம் இல்லை என்ற காரணத்துக்காக தேவாலயத்தில் வழங்கப்பட்ட மந்திர நீரை அருந்திய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் டீ.பீ தில்மி சந்துணிக்கா விஜேரத்ன என்ற 23 வயதான இளம் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்ற காரணத்தால் தன்னுடைய தந்தையின் உறவினர் ஒருவர் நடத்துகின்ற தேவாலயம் ஒன்றில் கடந்த மூண்டு நாட்களாக நாட்டு மாந்திரீக மருந்தொன்றை அருந்தி வந்துள்ளார்.

விட்டமின் மருந்து என்ற வகையில் அந்த பெண் இந்த மருந்தை அருந்திவந்துள்ள நிலையில் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக ஜயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொழுதே குறித்த இளம் பெண் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...