follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பிள்ளை பெறுவதற்காக தேவாலய மந்திர நீரை அருந்திய இளம் பெண் மரணம்

பிள்ளை பெறுவதற்காக தேவாலய மந்திர நீரை அருந்திய இளம் பெண் மரணம்

Published on

பிள்ளை பாக்கியம் இல்லை என்ற காரணத்துக்காக தேவாலயத்தில் வழங்கப்பட்ட மந்திர நீரை அருந்திய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் டீ.பீ தில்மி சந்துணிக்கா விஜேரத்ன என்ற 23 வயதான இளம் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்ற காரணத்தால் தன்னுடைய தந்தையின் உறவினர் ஒருவர் நடத்துகின்ற தேவாலயம் ஒன்றில் கடந்த மூண்டு நாட்களாக நாட்டு மாந்திரீக மருந்தொன்றை அருந்தி வந்துள்ளார்.

விட்டமின் மருந்து என்ற வகையில் அந்த பெண் இந்த மருந்தை அருந்திவந்துள்ள நிலையில் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக ஜயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொழுதே குறித்த இளம் பெண் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...