follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP1ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு - ஜனாதிபதி ரணில் கடும் விமர்சனம்

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு – ஜனாதிபதி ரணில் கடும் விமர்சனம்

Published on

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு சம்பவமானது ‘வழிபாட்டுச் சுதந்திரத்தை’ மீறுவதாகும், அது ‘கருத்துச் சுதந்திரத்தைப்’ பறிப்பதாக விளங்கக் கூடாது என்றும், வழிபாடு ஒரு பூரண உரிமை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மௌனம் சாதிப்பது குறித்து கேள்வி எழுப்பிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்;

“எல்லாவற்றையும் கருத்துச் சுதந்திரம் என்று கருத முடியாது. அதற்கு வரம்புகள் உண்டு. இது தெளிவாக வழிபாட்டு சுதந்திர பிரச்சினை. குர்ஆனில் பல முக்கியமான அர்த்தமுள்ள விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.”

மனித உரிமைகளை மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுப்படுத்த முடியாது என்றும், உலகளவில் அனைவருக்கும் பொதுவானது என்றும், தாம் ஒரு பௌத்தராக இருந்தாலும், தாம் உலகின் அனைத்து மதங்களையும் மதிக்கிற ஒருவர் என்றும், மேலும் அனைத்து மதங்களும் இறுதியில் சிறந்த விஷயங்களைக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 13ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் சமர்ப்பிக்கவுள்ள பிரேரணைக்கு இலங்கை ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...