உரிமம் இல்லாத பேருந்துகளை தேடி நாடு முழுவதும் சோதனை

756

அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை சுற்றிவளைப்பதற்காக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்காக 4 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

அண்மையில் பொலன்னறுவை, மனம்பிட்டிய கொட்டாலிய பாலத்தில் இருந்து பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், குறித்த பேரூந்தும் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here