உக்ரைனில் உள்ள இராணுவ புனர்வாழ்வு மையத்தின் அபிவிருத்திக்காக விசேட உதவிப் பொதியை அறிவிக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது 64 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான உதவித்தொகை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உக்ரைனில் இராணுவ தளவாடங்களை பழுது நீக்குவதற்கான நிதி வசதிகளை செய்து தர பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
G7 நாடுகளின் தலையீட்டின் பேரில் உக்ரைனுக்கு மேலும் 70 இராணுவ உபகரணங்கள் மற்றும் கவச வாகனங்கள் வழங்கப்பட உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.