follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1எதிர்வரும் காலங்களில் உர வவுச்சர் அமுல்படுத்தப்படாது

எதிர்வரும் காலங்களில் உர வவுச்சர் அமுல்படுத்தப்படாது

Published on

விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கும் முறை எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, விவசாயிகளின் விவசாயக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை கொள்வனவு செய்வதற்கு வவுச்சர்கள் மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு 200,00 ரூபா என்ற அளவில், இளவேனிற்காலத்தில் நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த மானிய வவுச்சர்கள் வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வவுச்சர் விநியோகத்தில் காணப்படும் நடைமுறை சிக்கல்களை கருத்திற்கொண்டு இனிமேல் வவுச்சர் வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறாக அடுத்த பருவத்தில் ரசாயன உரங்கள் அல்லது அங்கக உரங்களை அவர்களின் விருப்பத்திற்கேற்ப கொள்வனவு செய்ய விவசாயிகளின் கணக்கில் பணம் வரவு வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...