காத்தான்குடி அப்துர் ரவூப் இற்கு வழங்கப்பட்ட பத்வா குறித்து ஜனாதிபதி கேள்வி

3641

காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு மற்றும் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றின் தலைவரான ஏ.ஜே.அப்துர் ரவூப் மௌலவி முன்வைத்து வரும் மார்க்க கொள்கை தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தயாராக உள்ளதாக உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலான முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த 5ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் இறுதியில் காத்தான்குடியினைச் சேர்ந்த மௌலவி அப்துர் ரவூபிற்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் 40 வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட பத்வா தொடர்பில் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதியின் இக்கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு உலமா சபைத் தலைவர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,

“இஸ்­லா­மிய கொள்­கைக்கு முர­ணாக பேசி­ய­மை­யி­னா­லேயே மௌலவி அப்துர் ரவூ­பிற்கு எதி­ராக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வினால் பத்வா வழங்­கப்­பட்­டது.

“எல்லாம் இறைவன்” எனும் கொள்­கை­யினை அவர் இலங்கை வாழ் முஸ்­லிம்கள் மத்­தியில் முன்­வைத்தார். இது இஸ்­லாத்தில் பிழை­யா­ன­தொரு கோட்­பா­டாகும். இந்த கொள்கை முஸ்லிம் சமூ­கத்தில் அச்­ச­ம­யத்தில் பாரிய சர்ச்­சை­யினை ஏற்­ப­டுத்­தி­யது.

மௌலவி அப்துர் ரவூப் கல்வி கற்ற இலங்­கையின் பழைமை வாய்ந்த அரபுக் கல்­லூ­ரியில் அவரின் ஆசான்­க­ளாக இருந்த அஜ்வாத் ஆலிம், அப்துல் சமத் ஆலிம் உள்­ளிட்ட பல மூத்த உல­மாக்­க­ளி­னா­லேயே அவ­ரு­டைய கொள்கை வழி­கேடு என்றும், இஸ்­லா­மிய கோட்­பாட்­டிற்கு முற்­றிலும் முர­ணா­னது என்றும் பத்வா வழங்­கப்­பட்­டது.

எனினும் உள்­நாட்டில் வழங்­கப்­பட்ட பத்­வாக்­களை ஏற்­றுக்­கொள்ள மௌலவி அப்துர் ரவூப் அச்­ச­ம­யத்தில் மறுத்­து­விட்டார். இதனால், குறித்த விடயம் தொடர்பில் சர்­வ­தேச ரீதி­யாக புகழ்­பெற்ற எகிப்து அல் -அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் இந்­தி­யாவின் லக்­னோ­வி­லுள்ள நத்­வதுல் உலூம் அரபுக் கல்­லூரி ஆகி­ய­வற்­றுக்கு இந்த விடயம் அனுப்­பப்­பட்டு பத்வா கோரப்­பட்­டது.

இக்­காலப் பகு­தியில் எம்.எச். முஹம்மத், கலா­சார அமைச்­ச­ராக இருந்­த­மை­யினால் அவரின் ஏற்­பாட்டில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஊடா­கவே இந்த பத்வா கோரப்­பட்­டுள்­ளது.

அங்­கி­ருந்தும் இக்­கொள்கை வழி­கேடு என்று அறி­விக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்தே அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வினால் “எல்லாம் இறைவன்” எனும் கொள்­கைக்கு எதி­ராக பத்வா வழங்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து குறித்த கொள்­கை­யினை வாபஸ் பெறு­வ­தாக மௌலவி அப்துர் ரவூப் அப்­போது அறி­வித்தார். எனினும், சில காலங்­களின் பின்னர் இந்த கொள்­கை­யினை மீண்டும் அவர் பேச ஆரம்­பித்தார்.

பின்னர் அதனை வாபஸ் பெற்­றுக்­கொண்டார். இது போன்று பல தட­வைகள் பேசு­வதும், நிறுத்திக் கொள்­வ­து­மாக இந்த விவ­காரம் நீடித்துச் செல்­கி­றது.

இந்த கொள்­கையை அவர் பேசாமல் விடு­வதே சிறந்­த­தாகும். எனினும் இந்த விடயம் தொடர்பில் அவ­ருடன் பேச்சு நடத்த அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா எப்­போதும் தயா­ரா­கவே உள்­ளது” என றிஸ்வி முப்தி, ஜனா­தி­ப­திக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன் அவை தொடர்பில் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி – விடியல் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here