follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉலகம்பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Published on

பிரான்ஸ், பாரிஸ் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாஸ்டில் தினம் (Bastille Day) அல்லது பிரான்சின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படவுள்ளது.

இதன் அரசு விழா தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது.

அதே நேரத்தில், தலைநகர் உட்பட பிரான்சின் பாதுகாப்பிற்காக 30,000 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், மேலும் பாதுகாப்புக்காக ஹெலிகாப்டர்கள் அடங்கிய சிறப்பு பாதுகாப்பு பிரிவும் அழைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது இளைஞன் உயிரிழந்ததையடுத்து கடந்த சில வாரங்களாக பிரான்ஸில் அமைதியின்மை நிலவுகிறது.

இவ்வாறான பின்னணியில் தேசிய தின கொண்டாட்டம் நடைபெறுமா என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பிரான்சில் இன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, இந்த பாஸ்டில் தினத்திற்காக இந்தியாவுக்கு பிரான்ஸ் சிறப்பு அழைப்பை விடுத்துள்ளது.

அதன்படி இன்று பாஸ்டில் தின அரச விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக பங்கேற்க உள்ளார்.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் பிரான்ஸ் சென்றதாக இந்திய ஊடகங்கள் உறுதி செய்தன.

பிரதமரின் பிரான்ஸ் பயணத்துடன் இந்திய இராணுவக் குழுவும் பிரான்ஸ் சென்றுள்ளது.

இன்று பிரான்ஸ் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு தீர்மானம்

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்பு விசாக்கள் மூலம் பிரித்தானியாவுக்கு...