உயர்கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த புதிய திட்டம்

143

எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உயர்கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.

உயர்கல்வியை தொடர விரும்பும் ஒவ்வொரு மாணவருக்கும் உயர்கல்வி வழங்குவது அரசின் பொறுப்பு என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

நிலையான நாட்டை நோக்கி, அனைவரும் ஒரே பாதையில் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பல்கலைக்கழகங்களின் கிளைகளை இலங்கையில் நிறுவுவது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here