follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசிகளுக்கு பயப்பட வேண்டாம்

சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசிகளுக்கு பயப்பட வேண்டாம்

Published on

தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் சந்தேகம் ஏதும் தேவையில்லை எனவும், அதற்கமைய அந்த தடுப்பூசிகளை சிறுவர்களுக்கு கட்டாயமாக வழங்க வேண்டும் எனவும் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே வலியுறுத்தினார்.

மேலும் தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்துக்காக கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரத்தை உறுதிப்படுத்தியவை மட்டுமே என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கிணங்க, நோயைத் தடுப்பதற்காக உரிய தடுப்பூசிகளை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அது பல நோய்கள் அதிகரிக்கக் காரணமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படும் குளியாபிட்டிய மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

‘ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை’

விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியதை...

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...