உயர்தர மாணவர்களுக்கான 80 சதவீத வருகை வீதம் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த வருடத்திற்கு மாத்திரம் உள்ளடக்கிய வகையில் வருகை வீதத்தை 40 வீதமாகக் கருதுமாறு கல்வி அமைச்சுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.