சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(20) தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் ஆரோக்கியம் மக்களின் வாழ்க்கை என்றும், சுகாதார சீர்கேடு மக்களின் வாழ்வின் வீழ்ச்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.