follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

Published on

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் இலாபத்தில் இருந்து 1.5 பில்லியன் ரூபா அல்லது 150 கோடி ரூபா திறைசேரிக்கு வழங்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (20) தெரிவித்தார்.

எரிவாயு விலையை குறைப்பதன் மூலம் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம் கிடைக்கும் சிறிய இலாபத்தின் ஒரு பகுதியை, நிறுவனத்தின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக, இலாபத்தின் உரிமையாளரான அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு இறுதி நிவாரணம் கிடைக்கும் என நம்புவதாகவும் முதித பீரிஸ் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாகவே இந்த பெருந்தொகை வழங்கப்படுவதாக தெரிவித்த முதித பீரிஸ், இந்த பணத்தை அரசாங்கம் நிவாரணத் திட்டத்துக்கோ, அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்கோ அல்லது வேறு எதற்கோ பயன்படுத்தினாலும், அதன் உண்மையான உரிமையாளர்களான மக்களுக்கே பணம் திரும்பக் கிடைக்கும் என்றார்.

கொழும்பில் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று (20) விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய போது அதன் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...