கொழும்பு, நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணை கோடீஸ்வரர் ஒருவர் பாலியல் பலாத்காரம்

2143

சுமார் 48 வயதான கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர், கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனக்கு கீழ் பணிபுரிந்த 35 வயதுடைய பணிப்பெண்ணை கடுமையாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தடயவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் மாணவர் வீசாவில் இளைஞர்களை மேலதிக கல்விக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் முகவர் நிறுவனமொன்றை நடத்தும் கோடீஸ்வர வர்த்தகரான அருண பிரியங்கர என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக கூறப்படும் யுவதியினால் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர், கொழும்பில் உள்ள பிரதான ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு குறித்த யுவதிக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, சந்தேகநபர் ஹோட்டலில் சந்திப்பு மண்டபத்தை முன்கூட்டியே ஒதுக்கியிருந்ததாகவும், இளம் பணிப்பெண் அந்த மண்டபத்திற்குச் சென்றபோது, ​​கதவை மூடிய சந்தேகநபர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உண்மைகளை முன்வைத்ததுடன், முறைப்பாட்டாளர் தனது கட்சிக்காரருடன் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அந்த இடத்திற்குச் சென்றதாகத் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகரை, தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here