follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ரயில் பணிப்புறக்கணிப்பு - 11 அலுவலக ரயில்கள் இரத்து

ரயில் பணிப்புறக்கணிப்பு – 11 அலுவலக ரயில்கள் இரத்து

Published on

ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (24) காலை பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல புதிய புகையிரத சேவைகளை ஆரம்பிக்கும் புகையிரத அதிகாரசபையின் முயற்சிகளுக்கு எதிராக சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று எஞ்சின் சாரதிகள் குழு ஆரம்பித்திருந்தது.

இதன் காரணமாக நேற்று (23) சுமார் 21 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.

இன்று காலை பாதிக்கப்படக்கூடிய புகையிரதங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே;

“இன்று காலை இயக்கப்படவிருந்த சுமார் 11 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படும். அதன்படி, பிரதான பாதையில் 5 ரயில்கள், கரையோரப் பாதையில் இரண்டு ரயில்கள், களனிவெளி வழித்தடத்தில் இரண்டு ரயில்கள், புத்தளம் பாதையில் ஒரு ரயில் மற்றும் வடக்கு ரயில் பாதையில் ஒரு ரயில் இரத்து செய்யப்படும்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...