follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1ரயில் பணிப்புறக்கணிப்பு - 11 அலுவலக ரயில்கள் இரத்து

ரயில் பணிப்புறக்கணிப்பு – 11 அலுவலக ரயில்கள் இரத்து

Published on

ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (24) காலை பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல புதிய புகையிரத சேவைகளை ஆரம்பிக்கும் புகையிரத அதிகாரசபையின் முயற்சிகளுக்கு எதிராக சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று எஞ்சின் சாரதிகள் குழு ஆரம்பித்திருந்தது.

இதன் காரணமாக நேற்று (23) சுமார் 21 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.

இன்று காலை பாதிக்கப்படக்கூடிய புகையிரதங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே;

“இன்று காலை இயக்கப்படவிருந்த சுமார் 11 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படும். அதன்படி, பிரதான பாதையில் 5 ரயில்கள், கரையோரப் பாதையில் இரண்டு ரயில்கள், களனிவெளி வழித்தடத்தில் இரண்டு ரயில்கள், புத்தளம் பாதையில் ஒரு ரயில் மற்றும் வடக்கு ரயில் பாதையில் ஒரு ரயில் இரத்து செய்யப்படும்.”

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...