follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ரயில் பணிப்புறக்கணிப்பு - 11 அலுவலக ரயில்கள் இரத்து

ரயில் பணிப்புறக்கணிப்பு – 11 அலுவலக ரயில்கள் இரத்து

Published on

ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (24) காலை பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல புதிய புகையிரத சேவைகளை ஆரம்பிக்கும் புகையிரத அதிகாரசபையின் முயற்சிகளுக்கு எதிராக சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று எஞ்சின் சாரதிகள் குழு ஆரம்பித்திருந்தது.

இதன் காரணமாக நேற்று (23) சுமார் 21 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.

இன்று காலை பாதிக்கப்படக்கூடிய புகையிரதங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே;

“இன்று காலை இயக்கப்படவிருந்த சுமார் 11 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படும். அதன்படி, பிரதான பாதையில் 5 ரயில்கள், கரையோரப் பாதையில் இரண்டு ரயில்கள், களனிவெளி வழித்தடத்தில் இரண்டு ரயில்கள், புத்தளம் பாதையில் ஒரு ரயில் மற்றும் வடக்கு ரயில் பாதையில் ஒரு ரயில் இரத்து செய்யப்படும்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...