follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1'பெண்களே மஹிந்தவை அதிகம் நேசிக்கிறார்கள் - அவர் நம் இதயத்தில் பதிந்துவிட்டார்'

‘பெண்களே மஹிந்தவை அதிகம் நேசிக்கிறார்கள் – அவர் நம் இதயத்தில் பதிந்துவிட்டார்’

Published on

இந்நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரே கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆனமடுவையில் நேற்று (23) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிர்வாக சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்று மக்கள் நேசிக்கும் ஒரு தலைவரை தனது அரசியல் வாழ்வில் கண்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதற்குக் காரணம் எங்கள் கட்சி மற்றும் தலைவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே என்றும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவை பெண்கள் அதிகம் நேசிப்பதாகவும், அவர் எங்களின் இதயங்களில் இருப்பதாகவும், அவர் இல்லையென்றால் இந்த மேடையில் யாரும் அமர முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...