follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சூதாட்டம் மற்றும் பந்தயம் வரி ஒழுங்குமுறை சட்டமூலம் பாராளுமன்றத்தில்

சூதாட்டம் மற்றும் பந்தயம் வரி ஒழுங்குமுறை சட்டமூலம் பாராளுமன்றத்தில்

Published on

சூதாட்டம் மற்றும் சூதாட்டம் வரி ஒழுங்குமுறை சட்டமூலம் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய;

“.. சூதாட்டம் மற்றும் பந்தயம் வரிகள் ஒழுங்குமுறை சட்டமானது சூதாட்டம் மற்றும் பந்தயம் வரிகளை திருத்தும் சுற்றறிக்கை அல்லது விதிமுறைகளை கொண்டு வருகிறது.

இதற்கிடையில், சூதாட்டம் மற்றும் பந்தய வரிகளை அதிகரிப்பது தொடர்பான விதிமுறைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 அல்லது 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டு வர உள்ளோம்.

குறிப்பாக, அவற்றை செயல்படுத்துவதில் தாமதம் இருக்காது. ஏப்ரல் முதல் திகதியில் இருந்து இவற்றை அமுல்படுத்துவோம்.

அடுத்த பாராளுமன்றக் காலப்பகுதியில் அடுத்த மாதம் 8 அல்லது 9 ஆம் திகதி அந்த விதிமுறைகளை கொண்டு வர முடியும். ஆனால் அந்த வரிகள் 2023 ஏப்ரல் முதல் நாளிலிருந்து விதிக்கப்படும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...