follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பாராளுமன்றத்தை மூடிவிட்டு தனி ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள்.. அந்த சம்பளமும் மிச்சம்

பாராளுமன்றத்தை மூடிவிட்டு தனி ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள்.. அந்த சம்பளமும் மிச்சம்

Published on

பாராளுமன்றத்தை மூடிவிட்டு நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்தால் நாடாளுமன்ற பராமரிப்புக்கு செல்லும் தொகையும், சம்பளமும் மிச்சமாகும் என்றார்.

அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே நாட்டை மீட்டெடுப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும் எனவும் அதன் பின்னர் இலங்கை படிப்படியாக கடன் வாங்கும் நாடாக இல்லாமல் உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...