follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1சிறுநீரக சத்திர சிகிச்சை நிறுத்தப்படும் ஆபத்து

சிறுநீரக சத்திர சிகிச்சை நிறுத்தப்படும் ஆபத்து

Published on

கொழும்பு தேசிய சிறுநீரக வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மருந்து தட்டுப்பாடு காரணமாக அந்த வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து இருப்புக்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால் அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

அவசரகால கொள்வனவுகளின் போது இரண்டு இலட்சம் வால்வுகளை 20 அல்லது 30 இலட்சத்திற்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், தனியார் துறையைச் சேர்ந்த சிலர் அவற்றை ஏற்கனவே கொண்டு வந்து சேமித்து வைத்திருக்கலாம் எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...