follow the truth

follow the truth

July, 27, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்து மூலோபாயத் திட்டம்

போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்து மூலோபாயத் திட்டம்

Published on

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் குழுவின் தலைவர் அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் நேற்று (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கமைய, இலங்கை பொலிஸ், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான அதிகார சபை ஆகிய நிறுவனங்களை குழு முன்னிலையில் அழைத்து இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு தற்போதைய நிலைமையை கண்டறிவது அவசியமானது என குழுவின் தலைவர் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அதற்கமைய, அந்த நிறுவனங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான மூலோபாயத் திட்டம் மற்றும் அது தொடர்பில் செயற்படும் நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

பாடசாலை பெயர்ப் பலகைக்கு மாத்திரம் 2.4 மில்லியன் செலவு ? – கோபா குழு வெளியிட்ட தகவல்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக்...