ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளர் ரணில்

496

அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பரந்த அரசியல் கூட்டணியொன்று கட்டியெழுப்பப்படும் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாகவும் கட்சி சார்பற்ற ஜனாதிபதி வேட்பாளராகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மோதர பொனவிஸ்டா மைதானத்தில் நடைபெற்ற கொழும்பு வடக்கு தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here