follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வதில் அரசியல்வாதி ஒருவர் ஈடுபட்டிருந்த நிறுவனம் அம்பலம்

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வதில் அரசியல்வாதி ஒருவர் ஈடுபட்டிருந்த நிறுவனம் அம்பலம்

Published on

இந்த நாட்டிலுள்ள மருந்துகள் விநியோகஸ்தர்களில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனமே சுகாதார அமைச்சுக்கு அதிகளவான குறைபாடுள்ள மருந்துகளை வழங்கியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இதன்படி, கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மருந்துகளில் 10% – 24% குறைபாடுள்ளவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இந்நிறுவனம் வழங்கிய கணிசமான எண்ணிக்கையிலான மருந்துகள் தரமற்றவை.

2015-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுகாதார அமைச்சுக்கு அவர்கள் வழங்கிய மருந்துகளை ஆராயும் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் குறித்த நிறுவனம் மருந்துகளை வழங்கிய ஆண்டு, வழங்கப்பட்ட மருந்துகள், அதில் தோல்வியடைந்தவை சதவீதம் என முறையே வழங்கப்பட்டுள்ளது.

அதாவது 2015ம் ஆண்டு 70 மருந்துகள் கொண்டு வரப்பட்டால் அதில் 7 மருந்துகள் தரமற்றவை அதாவது 10.0% என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தளவு தோல்வியடைந்த மருந்து விநியோக நிறுவனமா இதுவரை மருந்துகளை விநியோகித்தது என்பதும், மறுபுறம், அவர் தனது உறவினர் நிறுவனத்தின் மருந்துகளின் சார்பாக சுகாதார அதிகாரிகளை முறைகேடாக பாதிக்கும் வகையில் பேரம் பேசும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் கடும் சிக்கலாக சந்தேகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...