follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசாந்த பண்டாரவுக்கு பொஹட்டுவயில் இருந்து புதிய பட்டம்

சாந்த பண்டாரவுக்கு பொஹட்டுவயில் இருந்து புதிய பட்டம்

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பொஹொட்டுவவில் இணைந்து கொண்ட ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய தொகுதியின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து அவர் அண்மையில் நியமனக் கடிதத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐந்தாம் திகதி பிங்கிரிய பொஹொட்டு ஆசன சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் தொகுதியின் பணிகளை உத்தியோகபூர்வமாக முன்னெடுப்பதாக பிங்கிரிய கரவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிங்கிரிய பிரதேச சபையிலும் உடுபத்தாவ பிரதேச சபையிலும் அமைச்சரின் பொது தினம் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், முன்னாள் பிரதி அமைச்சர் முனிதாச பிரேமச்சந்திரவின் சகோதரரும், வடமேற்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தலைவருமான சோமசிறி குணதிலக்க, பிங்கிரிய தொகுதி அமைப்பாளராகப் பணியாற்றியவர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...