சாந்த பண்டாரவுக்கு பொஹட்டுவயில் இருந்து புதிய பட்டம்

153

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பொஹொட்டுவவில் இணைந்து கொண்ட ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய தொகுதியின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து அவர் அண்மையில் நியமனக் கடிதத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐந்தாம் திகதி பிங்கிரிய பொஹொட்டு ஆசன சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் தொகுதியின் பணிகளை உத்தியோகபூர்வமாக முன்னெடுப்பதாக பிங்கிரிய கரவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிங்கிரிய பிரதேச சபையிலும் உடுபத்தாவ பிரதேச சபையிலும் அமைச்சரின் பொது தினம் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், முன்னாள் பிரதி அமைச்சர் முனிதாச பிரேமச்சந்திரவின் சகோதரரும், வடமேற்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தலைவருமான சோமசிறி குணதிலக்க, பிங்கிரிய தொகுதி அமைப்பாளராகப் பணியாற்றியவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here