பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தாம் வலுவாக ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கேப் மாகாணத்தில் கடந்த 30ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கடுமையாக எதிர்க்கும் சீனா, பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டிக்கிறது.
பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கும், சமூக ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாகிஸ்தான் அரசு செயல்படுத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வலுவாக ஆதரவளிப்பதாகவும் சீனா வலியுறுத்துகிறது.