இந்திய ரூபா தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தற்போது நிலவும் சில தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ளூர் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகளுக்கு இந்திய ரூபாய் சட்டப்பூர்வ நாணயமாக மாறாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மட்டுமே இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையிலான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.