இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 04 பேர் உயிரிழந்துள்ளனர்.
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏரியாகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குருநாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.