ஆதரவாளர்களை அமைதியாக இருக்குமாறு இம்ரான் கான் கோரிக்கை

476

கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அமைதியாக இருக்குமாறு தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம் முன்னாள் பிரதமர் இது தொடர்பில் தனது ஆதரவாளர்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு முன் இந்த வீடியோவை பதிவு செய்து விடுவதாகவும் இம்ரான் கான் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில், இம்ரான் கான் தனது கட்சி உறுப்பினர்கள் அமைதியாகவும் வலுவாகவும் இருக்க விரும்புவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பாக, பாகிஸ்தானின் பிடிஐ கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு நேற்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here