follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1முட்டை காரணமாக பேக்கரி தொழில் மீண்டும் நெருக்கடியில்

முட்டை காரணமாக பேக்கரி தொழில் மீண்டும் நெருக்கடியில்

Published on

பேக்கரி தொழிலுக்காக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் தொழில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதன் காரணமாகவே உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பேக்கரி பொருட்களுக்கு உள்ளூர் முட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை தமது தொழிலுக்காக விடுவிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...