மத்திய வங்கியின் கடன் தள்ளுபடிகள் குறித்து இந்நாட்களில் சமூக வலைதளங்களில் பொய்யான பிரச்சாரங்கள் பகிரப்படுவதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையானது;
மக்கள் வங்கியின் செலுத்தப்படாத கடன் தள்ளுபடிகள் தொடர்பான தவறான தகவல்கள் மீண்டும் சில சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.
இந்த பொய்க் குற்றச்சாட்டின் காலகட்ட மீள் எழுச்சி, இந்தச் செய்தி மக்கள் வங்கியின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்ட ஒரு தீங்கிழைக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று உறுதியாகக் கூறப்படுகின்றது.
மேற்கூறிய முயற்சிகளால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அந்த தவறான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை வங்கி நிர்வாகம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.