follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1நாமல் குமாரவை தாக்கிய தந்தை, மகன் கைது

நாமல் குமாரவை தாக்கிய தந்தை, மகன் கைது

Published on

ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவை தாக்கி அவரிடமிருந்து 60,000 ரூபா பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தந்தை முப்பத்தைந்து வயதான வர்த்தகர் மற்றும் அவரது இருபத்தி மூன்று வயது மகன் கூலி தொழிலாளி.

நாமல் குமாரவின் மனைவி மதுவந்தி திலகரத்ன செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரத விகாரைக்கு அருகில் நபர் ஒருவருடன் நாமல் குமார வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது தகராறு நடந்த இடத்திற்கு வந்து தந்தையும், மகனும் எங்கள் மக்களை தொந்தரவு செய்கிறீர்களா என்று கேட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த நாமல் குமார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தடியடி, கை, கால்களால் தாக்கப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற...