follow the truth

follow the truth

August, 6, 2025
HomeTOP1உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரை விடுவிக்கும் யோசனை இன்று அமைச்சரவைக்கு

உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரை விடுவிக்கும் யோசனை இன்று அமைச்சரவைக்கு

Published on

சமனல வாவியில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரை விடுவிப்பது தொடர்பான யோசனை, இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்றிரவு ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அடங்கிய யோசனை மீண்டும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

விவசாயத்திற்கு தேவையான நீரை விநியோகிக்குமாறு கோரி எம்பிலிப்பிட்டிய விவசாயிகள் முன்னெத்து வரும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பயிர்செய்கைக்கான நீர் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு தீர்வாக சமனல குளத்தின் நீரை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கடந்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்க விவசாய அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் எழுந்துள்ளதுடன், இது தொடர்பான பிரேரணை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்குவதற்கு சில தரப்பினர் நேரடியாக தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சமனல குளத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொள்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...