follow the truth

follow the truth

August, 6, 2025
HomeTOP1ஈரான்-இலங்கை கூட்டு பொருளாதார ஆணைக்குழுவை நிறுவ திட்டம்

ஈரான்-இலங்கை கூட்டு பொருளாதார ஆணைக்குழுவை நிறுவ திட்டம்

Published on

ஈரான்-இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு மற்றும் கூட்டுத் தூதரகம் மற்றும் சுற்றுலாக் குழுவை நிறுவ ஈரான் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் தெரிவித்தார்.

இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை தெஹ்ரானில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இரு அமைச்சர்களுக்குமிடையிலான கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், புதிய தொழில்நுட்பத் துறையில் திறன்களையும் அறிவையும் பரிமாறிக் கொள்ள ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஈரான் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

அங்கு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தமும் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...