follow the truth

follow the truth

August, 6, 2025
HomeTOP1'குடிநீர் கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் அணி திரளத் தொடங்குவார்கள்'

‘குடிநீர் கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் அணி திரளத் தொடங்குவார்கள்’

Published on

‘குடிநீர் கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் உடனடியாக அணிதிரளத் தொடங்குவார்கள்’ என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தற்போது மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பொருளாதார அழுத்தமும், மருந்துப் பிரச்சினையும் நோயாளிகளாக மாறுவதற்கு அவர்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்றார்.

“அரசாங்கத்தின் அதிகப்படியான வரி விதிப்பால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன. அதேபோல், பொருளாதார வீழ்ச்சியால் இலட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

எண்ணெய், மின்சாரம், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில், மக்களின் அத்தியாவசியப் பொருளான ‘தண்ணீர்’ கட்டணத்தை அதிகளவில் உயர்த்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை நிறைவேற்றப் போவதுடன் மக்களைப் பெரிதும் ஒடுக்குகிறது. மக்கள் மீதான இந்த அனைத்து அழுத்தங்களுக்கும் எதிராக வாழும் உரிமையை கோரி மாபெரும் பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராக உள்ளோம்.

குறிப்பாக இது குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து மக்களைத் திரட்டி செயற்படுகின்றோம். அதாவது, கடும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர், இதனால் அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. இந்த விடயங்களை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை என்பது ஒரு துரதிர்ஷ்டவசமான உண்மை” என்று அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...