பத்து வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு பாடசாலைக் கல்வி தடை

3439

ஆப்கானிஸ்தானில் 10 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் பாடசாலைக் கல்வியை தடை செய்ய தலிபான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தடை ஏற்கனவே அந்நாட்டின் பல மாகாணங்களில் அமுலில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, 10 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாடசாலைகள் அல்லது கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டாம் என தலிபான் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களின் கல்வி உரிமை உட்பட பல உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர், மேலும் பெண்கள் அழகு நிலையங்கள், ஜிம்கள் மற்றும் பூங்காக்களுக்குச் செல்வதைக் கூட தடை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here