follow the truth

follow the truth

August, 11, 2025
HomeTOP1'அரசாங்கத்தில் உள்ள அனைத்தையும் எதிர்ப்பது அல்ல எதிர்க்கட்சிகளின் வேலை'

‘அரசாங்கத்தில் உள்ள அனைத்தையும் எதிர்ப்பது அல்ல எதிர்க்கட்சிகளின் வேலை’

Published on

அரசாங்கத்தின் அனைத்தையும் எதிர்ப்பதே எதிர்க்கட்சியின் பணி என நினைப்பதை நிறுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விசேட அறிக்கையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பதின்மூன்றாவது திருத்தம் நாட்டுக்கு ஏற்றவாறு அமுல்படுத்தப்பட வேண்டும். அனைவரும் ஆழ்ந்த மத்தியஸ்த மனதுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால் மட்டுமே இது செய்யப்பட வேண்டும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைக்கத் தயங்குவதைக் காண முடிந்தது. இனி இந்த நிலையை மாற்றுவோம்.

அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறினால்தான் நம் நாடு முன்னேற முடியும். கடந்த காலத்தை பற்றி சிந்திக்காமல் எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து பொதுவான தீர்மானத்தை எடுப்போம்..” என ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...