follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1'அரசாங்கத்தில் உள்ள அனைத்தையும் எதிர்ப்பது அல்ல எதிர்க்கட்சிகளின் வேலை'

‘அரசாங்கத்தில் உள்ள அனைத்தையும் எதிர்ப்பது அல்ல எதிர்க்கட்சிகளின் வேலை’

Published on

அரசாங்கத்தின் அனைத்தையும் எதிர்ப்பதே எதிர்க்கட்சியின் பணி என நினைப்பதை நிறுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விசேட அறிக்கையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பதின்மூன்றாவது திருத்தம் நாட்டுக்கு ஏற்றவாறு அமுல்படுத்தப்பட வேண்டும். அனைவரும் ஆழ்ந்த மத்தியஸ்த மனதுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால் மட்டுமே இது செய்யப்பட வேண்டும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைக்கத் தயங்குவதைக் காண முடிந்தது. இனி இந்த நிலையை மாற்றுவோம்.

அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறினால்தான் நம் நாடு முன்னேற முடியும். கடந்த காலத்தை பற்றி சிந்திக்காமல் எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து பொதுவான தீர்மானத்தை எடுப்போம்..” என ஜனாதிபதி தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...