follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கட்சியை கையில் எடுத்து பணியாற்றுங்கள்.. ஆதங்கத்தில் பசில்

கட்சியை கையில் எடுத்து பணியாற்றுங்கள்.. ஆதங்கத்தில் பசில்

Published on

கட்சியை பொறுப்பேற்று தலைமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பொஹட்டுவ தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவால் புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாக அந்த குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கிறார்.

புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள எம்.பி.க்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பசில் ராஜபக்ஷ இவ்வாறு செய்தி அனுப்புவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசிலைச் சுற்றி தற்போது நாடாளுமன்றத்தில் 20க்கும் குறைவான உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர் என்பதை மேற்கண்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற தொகுதிக் குழுவில் உரையாற்றிய எம்.பி.க்கள் குழுவைக் காணும் போது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் குறித்த உறுப்பினர் மேலும் தெரிவிக்கின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...