கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கு நாளை, நாளை மறுதினம் மற்றும் சனிக்கிழமைகளை ஒதுக்குவதற்குத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கெஹலிய ரம்புக்வெல்லவின் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் குறைந்தது மூன்று நாட்களாவது தேவை எனவும், அதனை ஒரேயடியாகச் செய்வதற்கு தாம் தயாரில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.