கால்பந்து சம்மேளன தேர்தல் செப்டம்பர் 16

248

கால்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தலை செப்டெம்பர் 16ஆம் திகதி நடத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இலங்கைக்கு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக உத்தியோகபூர்வ தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here