மொபைல் போன் எண்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான ஆதரவை நிறுத்த Facebook Messenger தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் இந்த வசதி நீக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெட்டா மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த வசதி 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, எஸ்எம்எஸ் செய்திகள் ஊதா நிறத்திலும், மெசஞ்சர் செய்திகள் நீல நிறத்திலும் காட்டப்பட்டன.