follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மன்னிப்பு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மன்னிப்பு

Published on

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவுக்கு எதிரான 15 மாத சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கும் முடிவுக்கு தென்னாப்பிரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி சிரில் ராமபோசா ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு 2021 இல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் இரண்டு மாதங்கள் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல் நலக் காரணங்களால் அவர் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி தண்டனையை நிறுத்தி வைக்க ஒப்புதல் அளிக்காமல் இருந்திருந்தால், ஜுமா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.

அவரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் சட்டவிரோதமானது என அரசியலமைப்பு சபை தீர்ப்பளித்திருந்தமையே அதற்குக் காரணம்.

முன்னாள் ஜனாதிபதிக்கு 2021 ஆம் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஏனெனில் அவர் ஊழல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

81 வயதான ஜூமாவுக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என்று விமர்சகர்கள் தெரிவித்தனர்.

2021ல், தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது, ​​நாடு முழுவதும் நடந்த கலவரங்களால், 300க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...