follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1வில்வத்தையில் ரயிலுக்கு ஏற்பட்ட இழப்பை மீட்பதற்காக சட்ட நடவடிக்கை

வில்வத்தையில் ரயிலுக்கு ஏற்பட்ட இழப்பை மீட்பதற்காக சட்ட நடவடிக்கை

Published on

வில்வத்த புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தினால் புகையிரத திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை மீட்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் வஜிர சமன் பொல்வத்த தெரிவித்தார்.

அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்த அவர், புகையிரத விபத்தினால் திணைக்களத்திற்கு ஏற்பட்ட இழப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடுவதற்கு இரத்மலானை பொறியியல் பிரிவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்று செயற்படும் எனவும், அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரயில் விபத்தினால் திணைக்களத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை கன்டெய்னர் கார் உரிமையாளரிடமிருந்தோ அல்லது சாரதியிடமிருந்தோ மீட்டுத்தர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...