follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1வில்வத்தையில் ரயிலுக்கு ஏற்பட்ட இழப்பை மீட்பதற்காக சட்ட நடவடிக்கை

வில்வத்தையில் ரயிலுக்கு ஏற்பட்ட இழப்பை மீட்பதற்காக சட்ட நடவடிக்கை

Published on

வில்வத்த புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தினால் புகையிரத திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை மீட்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் வஜிர சமன் பொல்வத்த தெரிவித்தார்.

அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்த அவர், புகையிரத விபத்தினால் திணைக்களத்திற்கு ஏற்பட்ட இழப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடுவதற்கு இரத்மலானை பொறியியல் பிரிவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்று செயற்படும் எனவும், அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரயில் விபத்தினால் திணைக்களத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை கன்டெய்னர் கார் உரிமையாளரிடமிருந்தோ அல்லது சாரதியிடமிருந்தோ மீட்டுத்தர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...