follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP3இலங்கையில் முதன்முறையாக நிலத்திற்கு அடியில் உணவகம்

இலங்கையில் முதன்முறையாக நிலத்திற்கு அடியில் உணவகம்

Published on

இலங்கையில் முதன்முறையாக, நிலத்துக்கு அடியில் 124 மீற்றர் தொலைவில் போகல காரீய சுரங்கத்தில் உணவகமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சுரங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்தார்.

குறித்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய வசதி உள்ளதாகவும் மேலும், இந்த உணவகத்தின் ஊடாக காரீயம் வெட்டும் தொழிலாளர்களுக்கும், சுரங்கத்துக்கு வரும் மக்களுக்கும் உணவு வழங்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு காரீயம் ஏற்றுமதி செய்து நாட்டுக்கு அதிக அளவில் அந்நிய செலாவணியை இந்த காரீய சுரங்கம் ஈட்டித்தருவதாக அதன் நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...