follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP1நேத்ரா அலைவரிசை லைகா மொபைலுக்கு விற்கப்பட்டுள்ளது - NPP

நேத்ரா அலைவரிசை லைகா மொபைலுக்கு விற்கப்பட்டுள்ளது – NPP

Published on

அரசுக்குச் சொந்தமான நேத்ரா அலைவரிசையை (Channel Eye) ஜூன் 30 ம் திகதி முதல் ஆறு மாதங்களுக்கு, மாதத்திற்கு ரூ. 250 மில்லியனுக்கு VIS Broadcasting (Pvt.) Ltd நிறுவனத்திற்கு இரகசியமாக விற்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி நேற்று குற்றம் சாட்டியுள்ளது.

நேத்ரா அலைவரிசையின் ஒளிபரப்பு நேரம் எந்த வெளிப்படைத்தன்மையும் இன்றி விற்கப்பட்டுள்ளதாகவும், ரூபவாஹினி ஊழியர்கள் மற்றும் மக்கள் ஒப்பந்தத்தை எதிர்த்ததை அடுத்து, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நேற்று அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“VIS Broadcasting SBT சேனலின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அலைவரிசையினை பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. இந்த அலைவரிசையானது லைகாமொபைலுக்கு (Lycamobile) சொந்தமானது. அமைச்சர் பந்துல குணவர்தனவும் ஜனாதிபதியும் நேத்ரா அலைவரிசையின் உரிமையை ஆறு மாதங்களுக்கு மாற்றி பின்னர் இரண்டு வருடங்களாக நீடிக்க திட்டமிட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

பரிவர்த்தனை தொடர்பான முழு செயல்முறையையும் ஜூன் 30ஆம் திகதி முடித்து, ஜூலை 1ஆம் திகதி முதல் பரிவர்த்தனை அமுலுக்கு வரும் நிலையில், பரிவர்த்தனையை நியாயப்படுத்த அமைச்சரவைப் பத்திரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கைக்கு தேசிய மக்கள் சக்தி எதிரானது என்றும், அத்தகைய நடவடிக்கைக்கு எதிராக மக்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...