சனத் நிஷாந்தவை செலியூட் அடித்து வரவேற்ற மாணவர்கள்

377

சிலாபம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆராச்சிக்கட்டுவ கல்விப்பிரிவு ஆரம்ப பாடசாலையின் மாணவர்களால் பாடசாலைக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை செலியூட் அடித்து வரவேற்றதாக சிலாபத்தில் செய்தியொன்று பதிவாகியுள்ளது.

சனத் நிஷாந்த அவர்கள் அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புதிய கட்டிடத்தை வழங்குவதற்கான கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக அந்தப் பாடசாலைக்கு வருகை தந்துள்ளார், அவரை வரவேற்க பாடசாலை அதிபர் பிள்ளைகள் குழுவொன்றை நியமித்துள்ளார்.

வரவேற்பின் போது, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிடம் அப்பாடசாலையின் மாணவர்கள் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். அதில் தமது கல்லூரி ஆரம்பக் கல்வியிலிருந்து சாதாரண வகுப்புகளாக தரமுயர்த்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு பாடசாலை அதிபர் சந்தன விஜேசிங்கவிடம் வினவிய போது, ​​அதிபர் அருமையான பதில் அளித்துள்ளார்.

மாணவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விளைவாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

அதிபர் என்ற வகையில் அவர் தலையிட்டு மாணவனுக்கு அமைச்சரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, இப்பாடசாலை ஆராச்சிக்கட்டு கல்விப் பிரிவில் சிறந்த பாடசாலை என்ற பெயரையும் பெற்றுள்ளது.

அத்துடன் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பாடசாலையை இந்த நிலைக்கு உயர்த்தியதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here