follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் பல நாடுகளுக்கு பாதிப்பு

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் பல நாடுகளுக்கு பாதிப்பு

Published on

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், உலகின் பல நாடுகளின் அரிசிச் சந்தைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரிசி ஏற்றுமதியை தடை செய்வதற்கான இந்தியாவின் முடிவு உள்நாட்டு காரணங்களை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் அது உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறிய மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூலை 20 அன்று பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் அமுல்படுத்தப்பட்டு தற்போதும் நடைமுறையில் உள்ள உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, 2022 ஆம் ஆண்டில் உலக அரிசி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை கைப்பற்ற உள்ளது.

2022 ஆம் ஆண்டில் 140 நாடுகளுக்கு 9.66 பில்லியன் டாலர் மதிப்புள்ள 22 மில்லியன் டன் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது, இதில் 4.5 மில்லியன் டன் பாஸ்மதி அரிசி, 08 மில்லியன் டன் புழுங்கல் அரிசி, 06 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மற்றும் 3.5 மில்லியன் டன் உடைந்த அரிசி ஆகியவை அடங்கும்.

இந்தியாவின் தடைக்கு பின்னர் உலகளாவிய அரிசி விலை 15-25 சதவீதம் உயர்ந்துள்ளது, இந்திய வெள்ளை அரிசியை நம்பியுள்ள பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், உடைந்த அரிசியை உட்கொள்ளும் பெனின், செனகல், டோகோ, மாலி போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் இதன் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...