பாராளுமன்ற அறையில் இருந்து இரண்டு தலையணைகள் மற்றும் ஒரு மெத்தை

2060

நாடாளுமன்ற குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாகவும், அவை எதற்காக இந்த அறைக்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து கண்டறியப்படும் என்றும் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற பிரதிநிதி ஒருவர் பாராளுமன்ற வளாகத்தின் குழு அறைகளை ஆய்வு செய்த போது இந்த இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை கண்டுபிடிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் கட்டட பராமரிப்பு திணைக்களத்தில் சில அழகான இளம் பெண் பணியாளர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் குழுவொன்று குற்றம் சாட்டப்பட்டது, அதன் விளைவாக குழு அறைகள் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டன.

இதற்கிடையில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக பெண் ஊழியர்கள் உட்பட கிட்டத்தட்ட 20 பேரின் வாக்குமூலங்களை குழு ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கும், செல்வாக்கு செலுத்துவதற்கும் அதிகாரிகள் குழுவொன்று இரகசியமாக செயற்பட்டு வருவதாகவும், அது தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு விசாரணைக் குழுவிற்கு அண்மையில் பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட சபை உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்னவிடம் நாம் நடத்திய விசாரணையில், “.. பெண் ஊழியர்கள் பலர் இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவிற்கு எதிராக வலுவான சாட்சியங்களை வழங்கியதால், எம்.பி.க்கள் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசாரணை முடிவுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். துஷ்பிரயோகத்திற்கு ஆளான தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்..” எனத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here